தமிழ் நமக்குப் பெய்யும் மழை. முன்னோர் பெய்த சங்க இலக்கிய மழையில் நனைந்த அடியேன் அவர்களின் வாழ்க்கையையும் வரலாற்றையும் எண்ணிப் பார்க்கிறேன். அவர்களது வாழ்க்கையில் தென்படும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் பதப்படுத்திப் பயன்படுத்திக்கொள்ளலாமே என்று உலகுக்குப் படையலாக்குகிறேன்.
விருந்து படைத்தலை வேள்வி என்கிறார் திருவள்ளுவர். பார்ப்பனப் புலவர் பாலைக்கௌதமனார் கூட வந்தவர்களுக்கெல்லாம் உணவு வழங்குவதை ‘அடுநெய் ஆவுதி’ என்கிறார். இங்கு நம் முன்னோரின் தமிழ்விருந்து பதப்படுத்திப் படைக்கப்படுகிறது.
தமிழ் உலகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன். | பொதுவன் அடிகள்